சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் 8,000 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்


சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் நாடளாவிய ரீதியில் 8,000 போக்குவரத்து பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக, போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்கும் வகையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியான 10ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக 135 பேர் உயிரிழந்ததுடன், 750 பேர் காயமடைந்திருந்ததாகவும், அவர் தெரிவித்தார்.