இரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது :

இரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது - பா.உ ச.வியாழேந்திரன் வேதனையுடன் கூடிய காரசாரமான உரை

 கடந்த காலங்களில்  பாராளுமன்றத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள்.

இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது
இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்தவர் கருதப்படுகிறார்.

இன்று மதியம் 12 மணிக்கு முன்வரை 359 பொதுமக்கள் மரணித்திருக்கிறார்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள். காயப்பட்டவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

இந்த வேதனையான நிகழ்விற்கு முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து அவர் குற்றவாளி இவர் குற்றவாளி என்று ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு நாடகமாடுவதைவிடுத்து இத்துயர் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு நடைபெறலாம் என புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்த போதும்  அதை கவனத்தில் கொள்ளாமலும் மக்களுக்கு அறிவிக்காமலும் தங்களுடைய பாதுகாப்பை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்பட்டுள்ளனர்.

 இத் தற்கொலை தாக்குதல் ஆனது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் முன்னேற்பாடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது இது ஒரு தனியார் காணியில் நடைபெற்றிருக்கின்றது. இதை இலங்கைக் காவல்துறையும் அரசாங்கமும் அறிந்திருந்தும் இது வரை இது தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் அவர்களால் மக்களுக்கு அறிவிக்க முடியுமா? குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட தேவாலயம் தொடர்பான சில விடயங்களை அவதூறு செய்து  காணொளிகள் சிலரால் வெளியிடப்பட்டிருந்தன இருந்தும் இது தொடர்பாகவும் எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

 அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இப்படியான ஒரு பாரதூரமான இறப்பினை தடுத்திருக்கலாம்.

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய, சட்டத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மற்றவர்களை பொறுப்பு கூறிவிட்டு தாம் இந்த பிரச்சினையிலிருந்து விலகிக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களது இவ்வாறான செயற்பாடு இன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களது உயிர்களை காவு கொண்டுள்ளது. கடந்த 40 நாட்கள் உபவாசமிருந்து நாட்டின் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் இறைவனை வேண்டி  பிரார்த்தனை செய்து இயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிப்பதற்காக தேவாலயத்தில் கூடிய பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ஆண்கள், எனப் பலர்  போன்றோர் தீயில் கருகி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

என்னுடைய உறவினர்கள் கூட இருவர் இவ் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்து இருக்கின்றார்கள். இருவர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று பல துன்பங்களை இந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் நாங்கள் பார்த்துதுள்ளோம். இவற்றிற்கான சரியான தீர்வை மக்களுக்கு பெறக்கொடுக்க வேண்டும்.

இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வீணான பேச்சுக்களுக்கும், அவர் மீது பிழை, இவர் மீது பிழை என்ற நாடகம் ஆடுதலுக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் அவர்கள் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றினார்.

கொடூரமான உயிர்த்த ஞாயிறு படுகொலையும்  அரசியல்வாதிகளின் பங்கும்   http://www.battinews.com/2019/04/hate-speech.html