மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி பஸ் ஏறிய தொடக்கம் குண்டுவெடிப்பு வரை நடந்தது என்ன


(க. சரவணன் , ஆர்.சயனொளிபவன் )

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் முகமட் ராசிக் முகமட் காசீம் றில்வான் எனவும் இவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட  ஸஹ்ரான் காசிம்   உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று புதன்கிழமை (24) கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் பஸ்வண்டியில் ஏற்றுவதற்காக அவரை கார் ஒன்றில் பார்சலுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளது

இதனையடுத்து பின்னர் குறித்த பஸ்வண்டியில் ஏறிய தற்கொலை குண்டுதாரி மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகில் 21ம் திகதி அதிகாலை 2. 17 மணிக்கு பஸ்வண்டியில் இறங்கி அங்கிருந்து வாடகை ஆட்டோ ஒன்றில் நகரப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசலுக்கு 2.35 மணியளவில் வந்தடைந்த பின்னர் பள்ளிவாசல் வெளிக் கதவு பூட்டியிருப்பதால் அந்த கதவுக்கு அருகிலுள்ள கட்டில் படுத்துள்ளார்

இதன் பின்னர் அதிகாலை 4.15 சுபோ தொழுகைக்காக பள்ளி வாசல் மெலவி பள்ளிவாசல் கதவை திறந்ததும் அங்கு உள்சென்று அங்கு குளித்து ஆடை அணிந்து பின்னர் அழுது தொழுத பின்னர் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8.34 மணிக்கு அங்கிருந்து குண்டு பையுடன்  தோளில் போட்ட வண்ணம் வெளியேறி வீதி வழியாக மட்டு தலைமையக தபாற்கந்தோருக்கு அருகில் நடந்து வந்துள்ளார்

அதனை தொடர்ந்து அங்கிருந்து லவ்லேன் (ஆதராவீதி) வழியாக மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலய முன் பகுதிக்கு 8.45 மணிக்கு வந்தடைந்து அதற்கு முன்னாள் எதிரே வீதியிலுள்ள மரம் ஒன்றில் அருகிலுள்ள மதில் பகுதியில் குண்டு பையுடன் இருந்து களப்பாறி கண்களை கையினால் துடைத்த பின்னர்

மீண்டும் அங்கிருந்து 8. 54 மணிக்கு எழந்து தேவாலய பகுதிக்கு சென்று வாகன தரிப்பிடத்தில் ஜெயக்கொடி என்பவரிடம் தேவாலய ஆதாரணை எத்தனை மணிக்கு முடியும் கேட்டு வினாவிய பின்னர் ஆலயத்திற்குள் சென்று முஸ்லீம் மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்

அதன் பின்னர் 9.03 மணிக்கு தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த குண்டுதாரி காத்தான்குடியை பிறப்பிடமாகவும் தெமட்டகொடையை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனவும் சிசிரி கமராவின் உதவியுடன் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது

குறித்த தற்கொலையாளி பிரயாணம் செய்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தனியார் பஸ்வண்டி சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பஸ்வண்டிக்கு ஆசனப்பதிவு செய்தவர் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும்

ஸஹ்ரான் காசிம்   மாமரியார் மாமனர் மற்றும் தங்கையார் உட்பட 3 பேரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்    அதிகாரி தெரிவித்தார்

இது தொடர்பான விசாரணைகளை சிஜடி மற்றும் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .