மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது என பரப்பப்படும் செய்தி உண்மையில்லை - பொலிஸ்

மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது என சில ஊடகங்கள் மற்றும் பேஸ்புக்கில் வந்த செய்தி உண்மையில்லை என பொலிசார் தெரிவித்தனர்.  

மாவனல்லையை சேர்ந்த அதே பெயருடைய ஒருவரே கோட்டமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் ஆவர். 
போலியாக செய்தி பரப்பியவர்கள் மீது காத்தான்குடி , மட்டக்களப்பு  பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 பேஸ்புக்கில்  போலியான செய்திகளை பரப்புபவர்கள்   கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர். 

நேற்று தன்னாமுனை ,  கொக்கட்டிசோலையில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பில் இருந்து TID, மற்றும் விசேட பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பிற்கு வந்துள்ளனர். 
தொடர்ந்து மட்டக்களப்பில் கைதுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .