திருகோணமலையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள்




கதிரவன்

உயிர்த்த ஞாயிறு தினத்தின் போது ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக செவ்வாய்க்கிழமை 2019.04.23 திருகோணமலையில் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

அகரம் மக்கள் மையத்தினால் திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள சமாதான தூபியில் அஞ்சலி நிகழ்வு மாலை 5.30 மணிக்கு நடத்தப்பட்டது. இதில் தெல்லை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளும், திருமூலர் தம்பிரான் அடிகளும் பங்கு கொண்டார்கள். பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டு இறந்த உறவுகளுக்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்தார்கள்.

திருகோணமலை புல்மோட்டை வீதியில் மூன்றாவது மைல்கல் சந்தியில் செல்வநாகரம் இளைஞர்களால் மாலை 6.00 மணிக்கு மற்றொரு அஞ்சலி நிகழ்வு நடத்தப்ட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்த கொண்டு தீபம் ஏற்றி தமது அஞ்சலிகளைத் தெரிவித்தார்கள். வெளிநாட்டு பிரசைகளும் தமது அஞ்சலிகளை தெரிவித்தார்கள்.