மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்




பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் அனைத்து பாடாசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவாதற்காக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு பிரதானிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட அவாதானம் செலுத்தப்பட்டுள்ளது.