வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதியில் குண்டு வெடிப்பில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி மௌனஅஞ்சலி




மு.கோகிலன்

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று செவ்வாய் கிழமை காலை (23) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாழைச்சேனை வர்த்தக சமூகம்,சமூக அமைப்புக்கள்,இளைஞர் கழகங்கள், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஓண்றினைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்து ,கிறிஸ்த்தவ,பௌத்த மதகுருமார்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வில் கலந்து கொண்டோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தமது மௌன அஞ்சலியை செலுத்தினார்கள்.

வீதிகளில் வாழை மரங்கள் நடப்பட்டும், வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டும்,வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டும் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது.இதேவேளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் காணக் கூடியதாக இருந்தது.