உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வெல்லாவெளியில் விஷேட பூஜை வழிபாடுகள்




(வரதன்)

கடந்த உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின் போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மக்களின் அத்மா சாந்தி வேண்டியும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டியும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இறையாசி வேண்டியும் மட்டக்களப்பில் பல்வேறு மத வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன.



இதேவேளை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்ம சாந்தி விஷேட பூஜை வழிபாடுகள் இன்று நண்பகல் வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சி. சாம்பசிவ குருக்கள் தலைமையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இங்கு உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தக்காக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் காயமடைந்தகவர்கள் விரைவில் குணமடையவேணடியும் பாதுகாப்பு படையினருக்கு நல்லாசி வேண்டியும் மாரியம்மனுக்கு விஷேட வழிபாடுகள் இடம்பெற்றன. இவ் அஞ்சலி நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலக  பிரதம கணக்காளர் வ.நாகேஸ்வரன் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள் ஆலய பரிபாலன சபையினர் பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.