ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை




(லியோன்)

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்காக ஒன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் 8 ஆம் திகதி முதல் எதிர் வரும் 12 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச பிரிவுகளிலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை நேற்று  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பாக ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் தயாபரன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் செயலமர்வில் ஜனாதிபதி செயலக உதவி செயலாளர் அருணி சோமரத்ன , ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் .டப்ளியு ஜி .டப்ளியு . ஞானதயாளன் , , ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாள ஆர் .எம் எ ஐ . ரட்நாயக்க, மற்றும் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள் , ஓய்வூதிய அலுவலக உத்தியோகத்தர்கள் , ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்