நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வு


நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் பல நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. 

அதில் ஓர் அம்சமாக இன்று (10.04.2019) மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் சல்லிப்பிட்டி பிரதேசத்தில் மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

பசுமை பேணும் மாநகரினை உருவாக்கும் விதத்தில் வாவியை அண்டிய சூழலில் மருத மரங்கள் நட்டு வைக்கப்பட்டன.

மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், வேலைகள் நிலையியற் குழுவின் தலைவர் த.இராஜேந்திரன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.