மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் ஜும்மா தொழுகை

மு.கோகிலன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ,ஓட்டமாவடி,மிராவோடை பிரதேசங்களில்  உள்ள  ஜிம்மா பள்ளி வாயல்களில் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா  தொழுகைக்காக சென்றவர்களை பாதுகாப்பு படையினரால்  பள்ளி நுழை வாயிலில் வைத்து  உடல் பரிசோதனை மேற்கொள்வதனையும் பள்ளிவாயல்களை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுதனையும் ,வீதி தடைகள்  இடப்பட்டு பொலிசார், இராணுவத்தினர் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பாதுகாப்பு கடைமையில் ஈடுபட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.

 இதேவேளை வழமைக்கு மாறாக 20 நிமிடம் ஜும்மா  பிரசங்கம் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது