தாக்குதல் நடத்தியோரின் புகைப்படம் , வீடியோ மற்றும் அறிக்கையொன்றையும் வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது

இலங்கை தற்கொலை தாக்குதல் செய்வதாக வாக்குறுதி வழங்கும் 59 வினாடி காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பு ஏற்பதாக இன்று அமாக் அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.