வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருட பூசை

தமிழ் மற்றும் சிங்கள மக்களின் விகாரி புதுவருட விசேட பூசைகள் யாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள இந்து மற்றும் பௌத்த ஆலயங்களில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விகாரி புதுவருடத்திற்கான விசேட பூசைகள் என்பன வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது அபிஷேகப் பூசை மற்றும் வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், இப்பூசைகளில் பெருந்திரளான இந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

புதுவருடத்திற்கான விசேட பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.புஸ்ப பிரணவ சர்மா தலைமையில் நடைபெற்றது.