மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு


(லியோன்) 

 இன்று குருத்தோலை ஞாயிறு தினமாகும் . இன்றைய நாளில்  உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன . இந்நிகழ்வானது  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில்  நடந்த நிகழ்வாகும் . இன்றைய  நாளை  உலகில் உள்ள அணைத்தது கிறிஸ்தவர்களும் விசேட விதமாக நினைவு கூர்ந்து வருகின்றனர்.  . 

கிறிஸ்தவர்களின்  புனித நாட்களில் மிக முக்கிய நாளாக  குருத்தோலை ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது இந்நாளை நினைவு கூறும் முகமாக  மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கபட்டது 

இத்திருப்பலியில் பங்குதந்தை சி வி .அன்னதாஸ் ,உதவி பங்குதந்தை அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் என கலந்துகொண்டனர்