சஜித் பிரேமதாசவுடன் பொது நிகழ்வில் சங்ககாரா பங்கேற்றிருந்தபோதும், அரசியலுக்குள்பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.
‘ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக தங்களின் (சங்ககார) பெயர் குறிப்பிடப்பட்டது. நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியிருந்தீர்கள். இப்போது சஜித் பிரேமதாசவுடன் வந்திருக்கின்றீர்கள். அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் சஜித்துக்கும் கட்சிக்கும் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.
இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று சங்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
‘கட்சி முரண்பாடு தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளராக களமிறங்க ரணில் பொருத்தமானவர். இதை நான் சொல்வதால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளன் என்று நினைக்கவேண்டாம். நான் பொதுமகனாகவே கூறுகின்றேன்’ என்றார்.