தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுக்கும் விஷேட அறிவித்தல்


குழாய் நீரில் விஷம் கலந்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில்  வதந்தி  ஒன்று பரப்பப்பட்டுள்ளது. இதில் எதுவித உண்மையும் இல்லை என்பதோடு குடிநீரின் தரமானது உரிய அதிகாரிகளினால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட அனைத்து இடங்களுக்குமான உரிய பாதுகாப்பினை படையினர் வழங்கிவருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இது குறித்து கலவரமடையத்தேவையில்லை என்பதோடு வழமைபோன்று குடிநீரினை பயன்படுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொதுமக்களை கேட்டுள்ளார்.