இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தளபதியின் பரிந்துரையின் பேரில், இராணுவத் தொண்டர் படையணியின் கேர்ணல்கள் இருவருக்கு பிரிகேடியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையிலும் மற்றைய கேர்ணலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையிலும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் கேர்ணல்கள் 7 பேர் கேர்ணல் தரத்திற்கும் நிரந்தர படையணியின் லெப்டினன்ட் கேர்ணல்கள் 29 பேர் கேர்ணல் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

நிரந்தர படையணியின் லெப்டினன்ட் கேர்ணல்கள் 29 பேர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தொண்டர் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல்கள் 7 பேர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.