படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 41 பேர் கைது!


அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் தப்பிச்செல்ல முற்பட்ட 41 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு 1370 கடல் மைல் தொலைவில் இவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.