கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி ! இருவர் கைது


திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வென்றாசன்புர பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (22) உத்தரவிட்டார். 

யூனிட் 14, வென்ராசன்புர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த சுசந்த பிராமலால் வயது (42) என்பவரும், இரானிகம, தம்புள்ளைகல, கெகிராவ பகுதியைச் சேர்ந்த பண்டார மெனிக்கே வயது (39) என்ற பெண் ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, வென்ராசன்புர பகுதியில் சந்தேக நபரான பண்டார பெனிக்கே என்பவரின் கணவனான கெதர சமிந்த சமன் சமரசிங்க என்பவரை கள்ளக் காதலனுடன் இணைந்து கொலை செய்து விட்டு மலசல குழிக்குள் வீசியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரான பெண் தனது கணவனை உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வோம் என்று கூறி கள்ளக் காதலனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று கள்ளக் காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர் 

அப்பகுதியில் இருந்து வந்த துர்நாற்றம் காரணமாக பிரதேசத்திலுள்ளோருக்கு எழுந்த சந்தேகத்தை அடுத்து கந்தளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (20) மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் கந்தளாய் பொலிஸார் கள்ளக் காதலனையும், பெண்ணையும் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.