வெல்லாவெளியில் காயங்களுடன் சடலம் மீட்பு.


மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் உள்ள பாலத்தில் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(24)காலை 10.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

பாலத்திற்கு கீழ் காணப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன் என்பவருடையது என தெரியவந்துள்ளது.

சடலத்தின் தலையில் காயம் ஒன்று அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.