பயங்கரவாதிகள் மறைத்துவைத்த வெடிபொருட்கள் காத்தான்குடி கடற்கரையில் மீட்பு

காத்தான்குடி  கடற்கரை  பிரதேசத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்டு இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் தேடி கண்டுபிடிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.