அஸாத் சாலி, ACJU தலைவரிடம் செவ்வாயன்று விசாரணை



உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி​யமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நான்காம்கட்ட விசாரணை, செவ்வாய்க்கிழமையன்று (11) இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர், காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையாகி, சாட்சியமளிக்கவுள்ளனர்.

மூன்றாம் கட்டமாக இன்று (06) இடம்பெற்ற அமர்வின் போது, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது