பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இன்றைய அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமூகமளிக்க உள்ளார். இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சமீபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் சாட்சியம் அளித்திருந்தார்