நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக்கொள்கையும் அவசியம்


நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும் என்றார்.

குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் நேற்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார். நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அனைத்து இன மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.