க.பொ.த (சா/ த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை


டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த (சா/ த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்க வேண்டும்.

டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளன.

சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு அவர் பாடசாலைகளின் அதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.