வந்தாறுமூலையில் உலக சுற்றாடல் தின நிகழ்வை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு



ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அனுசரனையுடன் வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் சனசமூக நிலைய நிர்வாகக் குழுவினரால் உலக சுற்றாடல் தின நிகழ்வை முன்னிட்டு மரநடுகை வைபவமும், கலந்துரையாடலும் 09.06.2019 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வினை  வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் சனசமூக நிலைய நிர்வாகக் குழுவின் தலைவர் வெற்றிவேல் - சசிகரன் அவர்கள் தலைமைதாங்கியிருந்தார். இதன்போது 2019ம் ஆண்டுக்கான ; உலக சுற்றாடல் தின  கருப்பொருளாகிய 'நிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதை குறைத்துக் கொள்ளல்' எனும் தலைப்பில் மட்/ககு/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் ச.வேதநாயகம் அவர்கள் கலந்துரையாடலை நிகழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து இறை ஆராதனையுடன் பழமரக்கன்றுகள் ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் சனசமூக நிலைய நிர்வாகக் குழுவின் அங்கத்தவர்களினது இல்லங்களிலும் நடுகைசெய்யப்பட்டிருந்தது.