கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்


பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.