கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு முன்பாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வருடந்தோறும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான நிகழ்வு இம்முறையும் ஜுன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சிறப்பாக இடம்பெற்றன.
இதன்போது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தின் 40 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து இச் சிரமதான பணிகளை இரு தினங்களிலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தை தரிசிப்பதற்காக பல இலட்சம் மக்கள் இங்கு கூடுவதோடு காட்டு வழியாக கதிர்காமம் நோக்கி செல்வோரின் தங்குமிடமாகவும் இது திகழ்கின்றது.