சங்ரில்லா ஹோட்டல் மீண்டும் திறப்பு



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று கொழும்பு கிங்ஸ்பரி சினமன்லேக் சைட் மற்றும் சங்ரில்லா ஆகிய 3 ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல் இரண்டும் இதற்கு முன்னர் திறக்கப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது. தமது ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.