மக்களின் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை



ஜனாதிபதி நாட்டை நிர்வகிப்பதைத் தவிற ஏனைய விடயங்களையே செய்து வருகிறார். இதனால், நாடு அராஜக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

​கொழும்பில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில், இன்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாட்டை நிர்வகிப்பதன் பிரதான விடயம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே ஆகும். ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த நான்கரை வருடத்தில் தனித் தனியே பயணித்தனால், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.