முடிவுக்கு வந்தது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம்




கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் 
இன்று 23 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞானசார தேரர் வருகைதந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் ஏராளமான நிர்வாக சிக்கல்கள் இருப்பதால் இதனை தரமுயர்த்தி தருவதற்கு தனக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை விகாராதிபதி ரன்முத்து சங்கரட்ன தேரரிடம் கோரினார். இதையடுத்து தேரர் உட்பட 4 பேர் போராட்டத்தை இடைநிறுத்தினர்.

எனினும் ஐவர் நீராகாரத்துடன் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை நிறுத்தி எழுந்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.

ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளனர்