விஷேட பொலிஸ் குழுவிற்கு இதுவரை 04 முறைப்பாடுகள்


முன்னால் அமைச்சர் றிசாட் பதியுதீன், முன்னால் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காக அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவிற்கு இதுவரையில் 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அவற்றுள் 3 முறைப்பாடுகள் றிசாட் பதியுதீனுக்கு எதிரானதாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்தார். 

இந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 4ம் திகதி அமைக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு எதிர்வரும் 12ம் திகதி மாலை 4.00 மணி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்றும அவர் மேலும் தெரிவித்தார்.