வாழைச்சேனை அருள் மிகு ஸ்ரீமுருகன் ஆலய சங்காபிஷேக பெருவிழா


மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை அருள் மிகு ஸ்ரீமுருகன் ஆலய வருஷாபிஷேக சகஸ்ர மகா 1008 சங்காபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பால்குட பவனியும் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனியானது கல்குடாவீதி வழியாக வந்து ஆலயத்தினை சென்றடைந்தது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பு.ரதிகரன் சர்மா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்காபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ பா.நரேந்திர குருக்கள் மற்றும் சர்வ போதகாசிரியர் சிவஸ்ரீ இ.பாலகிருஷ்ண குருக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு சங்காபிஷேக நிகழ்வுகளை நடாத்தினார்கள்.