5 மாணவர்கள் படுகொலை;விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு



திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் குற்றமற்றவர்கள் என அறிவித்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மீள விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.