பொலிசார் பறிகொடுத்த கை துப்பாக்கியை தேடி பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் சந்தேகத்தில் 21 பேர் கைது



(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் பறிகொடுத்த கைதுப்பாக்கியை தேடி அந்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் பகல் 1 மணிவரை இராணுவத்தினர் பொலிசார் சுற்றிவளைப்பு தேடுதல் அதேவேளை சந்தேகத்தில் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இருவரை பொலிசார் நிறுத்த முற்பட்டபோது அவர்கள் வீதியில் நிறுத்தி வைத்திருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர் இதனையடுத்து அங்கு இளைஞர்கள் பொலிசார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்;றை அபகரித்து சென்ற சம்பவம் இடம்பெற்றது 

இந்த நிலையையடுத்து இராணுவத்தினர் பொலிசார் இன்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை 5 மணி தொடக்கம் பகல் 1 மணிவரை குறித்த பகுதியை சுற்றிவளைத்து இந்த பகுதியில் இருந்து எவரும் உள் செல்லவே வெளிசெல்லவே விடாது வீடு வீடாக பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர் 

இதன் போது பொலிசார் பறிகொடுத்த கை துப்பாக்கி அந்த பகுதிலில் இருக்கும் கிணறு ஒன்றில் வீசப்பட்டதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அந்த கிணற்றின் நீரை இறைத்து அதில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கடை உரிமையாளர்கள் உட்பட 21 பேரை இதுவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் காத்துக் கிடக்கின்றனர். 

இதேவேளை இந்த பகுதியில் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் மற்றம் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிசார் உட்பட விபத்தில் காயமடைந்த 4 பேரை மட்டு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .