வாழைச்சேனை பள்ளையப் பேச்சியம்மன் ஆலய தீ மிதிப்பு



(ந.குகதர்சன்)

வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதல் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

கடந்த 05ம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் பத்து நாட்கள் இரவு, பகல் பூசைகள் இடம்பெற்று இன்று செவ்வாய்கிழமை தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இங்கு இடம்பெற்ற தீ மிதிப்பில் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு நூற்றுக் கணக்கான ஆண்கள் முதல் பெண்கள் வரை கலந்து கொண்டனர்.

இக்கால சடங்கு உற்சவ பூசைகள் யாவும் எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் நடைபெற்றது.