அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்



(கனகராசா சரவணன்)

அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை(06) காலையில் இடம்பெற்றது 

தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில் காலை 11 மணிக்கு இடம் பெற்ற இந்த கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் காஷ். மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய், நல்லாட்சியா நரி ஆட்சியா, அடக்காதே அடக்காதே தமிழ் மக்களை, பயங்கரவாத சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷாங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

சுமார் ஒருமணித்தியாலம் இடம்பெற்ற இந்த கவனயீர்பு ஆர்பாட்டம் பகல் 12 மணிக்கு முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.