இந்து கல்லூரி மாகாண மட்ட தமிழ்மொழித்தின வில்லுப்பாட்டு போட்டியில் இரண்டாமிடம்



கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின போட்டியில் மட்/மட்/ இந்து கல்லூரி மாணவர்களின் வில்லுப்பாட்டு குழு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்ற மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டியிலே "யாகாவராயினும் நாகாக்க" தொடர்பான தலைப்பில் மாணவர்கள் அரங்கேற்றினார்கள். 

இதற்கு முன்னர் கோட்டம்,வலயம், மாவட்டம் வரை 15 பாடசாலைகளை எதிர்கொண்டு இக்குழுவினர் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் வில்லுப்பாட்டினை நெறிப்படுத்திய ஆசிரியர் திரு எ.பிரியகாந்தன் அவர்களுக்கும் வெற்றியை நோக்கிய பயணத்துக்கான ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,ஏனைய ஆசிரியர்கள் கல்விசார ஊழியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்ளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.