கல்குடா கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்த மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவி


மாகாணமட்ட தமிழ் தினப் போட்டி கடந்த 7ம் திகதி நடைபெற்று மட்டு மாவட்டம் முதலிடத்தை சுவீகரித்திருந்தது. அந்த வகையில் 3ம் பிரிவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மட்/ககு/ வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவி செல்வி. ராஜேந்திரன் கிறிஸக்டிகா முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு மட்டுமின்றி கல்குடா கல்வி வலயத்திற்கும் மட்டு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.

அம்மாணவியை திறம்பட பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. லோகேஸ்வரி ரவி அவர்களையும் சாதனைக்குரிய மாணவி செல்வி. ராஜேந்திரன் கிறிஸ்டிக்கா அவர்களையும் வித்தியாலயத்தின் அதிபர். திரு. ச. மோகன் அவர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் காலை ஒன்று கூடலின் போது பாராட்டு தெரிவித்தனர்.