ஜனாதிபதி - தமிழ் உறுப்பினர்கள் இன்று விசேட பேச்சுவார்த்தை




நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

முற்பகல் 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தற்போதைய அரசியல் நிலை மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.