உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது பாரிய தவறு



உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது மக்களினால் மேற்கொள்ளப்படும் பாரிய தவறு என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இன்று (09) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் பாராளுமன்றத்தில் 70 அல்லது 80 பேர் அளவில் உயர்தரம் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் போட்டியிட தேவையில்லை எனவும் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்வைத்தால் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.