மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம், நாடளாவிய ரீதியில் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 9,692 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்