கணித முகாம் - கட்டம் 2



கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் கணித படத்திற்கான பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில் கணிதத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. பெ. தோ.  அமலதாஸ் அவர்களால் திட்டமிடப்பட்டு ஆசிரிய ஆலோசகர் திரு. செ. ஆ. சத்தியசீலன் அவர்களின்  கண்காணிப்பின் கீழ் அமுல்படுத்தி வரும் 'கணித முகாம்' இன் இரண்டாம் கட்ட நிகழ்வு இம்மாதம் 20, 21, 22, 23 ஆகிய தினங்களில் 
ஏறாவூர்ப் பற்று கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு மட்.ககு. முறக்கொட்டாஞ்சேனை இ. கி. மி. வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு 'WORLD VISSION LANKA' அனுசரனை வழங்கி வருகிறது. மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. ரவி அவர்களும் அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. த.அனந்தரூபன் அவர்களும் 'கணித முகாம்' நடைபெறும் வேளையில் தமது களத் தரிசிப்பினை மேற்கொண்டிருந்ததுடன் மாணவர்களுக்கு இக் 'கணித முகாமின்' முக்கியத்தவத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.

இக் ' கணித முகாமின்' மூன்றாம் கட்ட நிகழ்வானது கோறளைப் பற்று கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இம்மாதம் 26, 27, 28, 29 ஆகிய தினங்களில் மட்.ககு.சந்திவெளி சி. விநா. வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.