2018 -/ 2019பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டம் கட்டமாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இம்முறை 31,158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமதிலக தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 645 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.