JMI அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் கைது



சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மொஹிதீன் பாவா மொஹமட் எனும் அபூ அக்ரான் என்பவராவார். 

குறித்த நபர் நுவ​ரெலியாவில் இடம்பெற்ற சஹ்ரானின் கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் மாவனெல்ல, தனாகம பகுதியை மொஹமட் ரியால் மொஹமட் சஜிட் எனும் அபூ சல்மான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் சஹ்ரானின் நுவரெலியாவில் கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் வரகாபெல பகுதியை சேர்ந்த மொஹமட் ரம்ஸின் ருஸ்தி அஹமட் எனும் அபூ அல்வகார் என்பவராவார். 

குறித்த நபர் இடம்பெற்ற சஹ்ரானின் ஹம்பாந்தோட்டை கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.