வவுணதீவு வயல் பகுதியில் ஆர் பி. ஜி. ரக குண்டு மீட்பு



(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு வவுணதீவு முந்தானைவெளி பிரதேசத்து வயல் வெளியில் கைவிடப்பட்ட ஆர் பி. ஜி. ரக குண்டு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.


வவுணதீவு பத்தைகாட்டு முந்தானைவெளி பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் உள்ள வயல் வெளியில் குண்டு ஒன்று இருப்பதாக விவசாயிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர் 


இதனையடுத்து குறித்த பிரதேசத்துக்க சென்று பொலிசார் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆர்.பி.ஜி.ரக குண்டை மீட்டுள்ளனர் 


இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.