நாடாளுமன்ற தொலைக்காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது!

புதிய நாடாளுமன்ற தொலைக்காட்சி அலைவரிசையொன்று இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அதிகாரிகள் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகள், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் கோப் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் ஆகியவை இந்த அலைவரிசை ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்களுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.