ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு



(எச்.எம்.எம்.பர்ஸான்)


ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையின் பின்னர் இன்று (19) ம் திகதி திங்கட்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமானது.

அந்தவகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டதாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று ஆரம்பமான பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு வருகை தந்ததோடு ஆசிரியர்களின் வருகையும் அதிகரித்துக் காணப்பட்டது.

அத்தோடு ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நான் நேரில் சென்று பார்வையிட்ட போது அங்கு சிறப்பான முறையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிந்தது என்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.