திருகோணமலையில் பிரதமரின் தலைமையில் காபட் வீதிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.




(எப்.முபாரக் )


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் வேண்டுகோளுக்கினங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை மாவட்டத்தில் I Project இன் கீழ் அமைக்கப்படவுள்ள வீதிகளின் நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த திட்டத்துக்கான பிரதான நிகழ்வு பிரதமர் தலைமையில் மூதூரில் நடைபெறவுள்ளது. இதன் போது பல வீதிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

கடந்த மாதமும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் கிண்ணியாவுக்கு பிரதமர் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.