புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆரம்பம்



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இந்த பணி இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கைகளுக்காக 39 பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

436 குழுக்களின் கீழ் இடம்பெற்றுவரும் இந்த நடவடிக்கைகளில் 6976 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.